Powered By Blogger

வியாழன், 9 ஜூன், 2016

பூ - மூன்று

 அதன் பின்.. பாணு..
என் இதய சிம்மாசனத்தில்  ஏறி உட்கார்ந்து  கொண்டு  என்னை  ஆளும்  என் இதய ராணியாக மாறினாள்..!!

நான்  அவள் சேவகனாக மாறினேன்.

இரண்டு  வாரங்கள்  ரெக்கை கட்டிக் கொண்டு  பறந்தன. என் தங்கைக்கு தெரியாமல்  என் காதலை நான்  காப்பாற்ற  வேண்டி இருந்தது.
அதனால்  வெளியில்  எங்காவது சந்திப்பதேகூட மிக கடினமாக இருந்தது.

 மூன்றாவது  வாரத்தில் தான்.. முதன் முதலாக  ஒரு நாள்  சினிமா  போனோம்.
அன்று நான்  இந்த  பூமியிலேயே இல்லை.  இந்த  பூலோக உருண்டையை கடந்து  எங்கெங்கோ  சஞ்சரித்துக் கொண்டிருந்தேன்.
அன்று தான்  முதன் முதலாக அவளை முத்தமிட்டேன்.

 அவளது சிவந்த மெல்லிய   இதழில் என் உதட்டை வைத்து  முத்தம்  கொடுத்தேன்.
அந்த இனிப்பான முத்த தருணம் என்னுள் அப்பணியே உறைந்து நின்றது..!
  அப்புறம் சிறிது நேரம் போக   அவளே எனக்கு  விரும்பி  முத்தம் கொடுத்தாள்..!!
அன்று  முத்தம்  மட்டும் தான்.
அதற்கு மேல் எனக்கு  அனுமதி  தரவில்லை.. !!

 அவள்  முத்தத்தில் பித்து பிடித்து போய்..
அவளை தனிமையில் சந்திக்க நான் மிகவும்  ஏங்கித் தவித்தேன்..!!

அப்படி.. இப்படி  என.. ஒரு  மாதம்  கடந்த  நிலையில்.. ஒரு  நாள்  காலையில்  எனக்கு  போன் செய்து  சொன்னாள்.

"இன்னிக்கு  நான்  காலேஜ்  போகலபா வீட்லதான் இருக்கேன்..!!"

"ஏன்.. என்னாச்சு.. ?"

"லைட்டா பீவர்.. "

" பீவரா.. ? நான்  உன்னை பாக்கனுமே.. ?"

 "சரி.. வீட்டுக்கு வாங்க.. "

"வீட்டுக்கா ?"

"ம்ம்.. !!" சிரித்தாள் "வீட்ல யாரும்  இல்ல.. இப்ப  நான்  மட்டும் தான்.. !!" என அவள்  சிரித்தபடி  சொல்ல..

' குப்பென '  என்னுள் ஒரு  பரவசம்  பொங்கியது..
அவள் வீட்டில் அவளை தனியாக  பார்க்கப் போகிறேன்......!!

-  வரும்.........